Author: - இரவீ -
•AM 12:42

விருது ரொம்ப அதிகம்னாலும் - மனச தேத்திகிட்டு விருது கொடுத்த கடையம் ஆனந்த்: அவர்களுக்கு மிக்க நன்றி.


பத்து என்ன ஆனந்த் - ஆயிரம் ஆயிரம் பேருக்கு கொடுக்கறேன்,

ஆமாம் - இவங்க எல்லாருக்கும் ஆயிரம் ஆயிரம் முறை இந்த விருது வழங்கப்படுகின்றது....

சுவிஸ்-ஹேமா

நட்புடன் ஜமால்:

கணினி தேசம்:

G3 :

சாரல் :

டம்பி மேவீ :

ஆளவந்தான்:

ஆதவா:

முல்லைமண்:

நிலாவும் அம்மாவும் -(எ)பொன்னாத்தா:

எவ்வளவு மனநிறைவா இருக்கு .... நீங்களும் கொடுங்க.

அனைவர்க்கும் இந்த பதிவின் வாயிலாக எனது இனிய வாழ்த்துக்கள்.
Author: - இரவீ -
•PM 10:43

நண்பர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.

எல்லோருமாக அவருக்காக பிரார்த்திப்போம்.

இங்கும் பாருங்கள்:


முடிந்த அளவு இவ்விடயத்தை உங்கள் வலையின் மூலம் உங்கள் நட்புகளுக்கு கொண்டு செல்லுங்கள்.
Author: - இரவீ -
•PM 10:34

எனது வரிகளை உன்
கண் பார்த்தபோது கவிதையானது,
கை பட்டபோது காவியமானது,
இமை மூடி திறந்துப்பார் -
இலக்கியமாகிவிடும்.



குறிப்பு: ஒரு டாகுமென்ட் ரிவீவ் முடிஞ்சதுக்கு - இது ரொம்ப அதிகம்.
Author: - இரவீ -
•PM 10:16
மக்களே... இந்த ஹேமாவ நம்பி உப்புமட சந்தியில் நான்   கதை பேச போனா - எப்படி என்ன மாட்டிவிட்டுருக்காங்க பாருங்க ...

சரி போகட்டும் ... என்னையும் ஒரு பதிவரா நெனச்சு தொடருக்கு அழைத்ததற்கு நன்றி ஹேமா... :

ஹேமாவோட தொடர் கேள்விகளுக்கு பதில் சொல்லுறதுக்கு முன்னால உங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்ல போறேன் - நானும் ஒரு ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியா இருக்குறது இப்ப தான் எனக்கு தெரிய வந்தது அதான் நம்ம அந்நியன் படம் மாதிரி- இப்போ அவங்களுக்கு அறிமுகம்...
1. அம்பி - அம்மா பையன்.
2. ரவியோ - ஆசை தோசை அப்பள வட பையன் (இதுக்கே... கோவப்பட்டா எப்படி - இன்னும் நிறைய இருக்கு தொடர்ந்து படிங்க ...).
3. அந்நியன் - மனசாட்சி பையன்.

இப்ப இவங்க மூணு பேரும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல போறாங்க.

A)அழகு என்பது என்ன ?நிரந்தரமானதா ?

1. அம்பி :- அம்மாவின் சிரிப்பு, தலை கோதி-முதுகு தட்டும் பாசம், கோவப்பட தெரியாமல் கோவப்படும் அந்த முகம் எல்லாம் அழகுதான் - கண்டிப்பா நிரந்தரம்.

2. ரவியோ :- பசுமையான நினைவுகள் அனைத்துமே அழகு தான் - நினைவுன்னு சொன்னதுமே புரிஞ்சிருக்கும் இது நிரந்தரம் இல்லைன்னு - என் மனசு போல.

3. அந்நியன் :- ஒவ்வொரு அணுவும் தனித்துவமான அழகான விஷயம் - மனதியல் விஷயம் என்பதால் - ஏற்று கொள்ள விரும்பாத விஷயத்த அழகு இல்லன்னு சொல்லிடறோம் - உண்மையா அழகில்லா விஷயம் உலகில் இல்லை.

B)காதல் மனிதனுக்கு அவசியமா ?

1. அம்பி :- கண்டிப்பா தேவை - அது வாழ்க்கை துணையுடன் மட்டும் அல்ல - சுற்றம் மற்றும் நட்புகளுடனும் அவ்வாறே இருக்கணும்.

2. ரவியோ :- அதுவே உண்மையான வாழ்க்கை - உங்க வாழ்க்கையில் எப்போது காதல் வந்தது என்பதை சொன்னால், நீங்க எப்போது வாழ ஆரம்பிச்சீங்கன்னு நான் சொல்லிடுவேன். (இங்க வாழ என்பதை சாக என்று படித்த அனைவருக்கும் ஒரு கொட்டு).

3. அந்நியன் :- இப்படி ஒரு விவாதமே தேவை இல்லை - ஏன்னா வாழ்வியலின் ஆதாரமே இதுதான் - நமது செயல் ஒவ்வொன்றும் இதன் அடிப்படையிலேயே இயங்குகிறது.

C)கடவுள் உண்டா ?

1. அம்பி :- கண்டிப்பா இருக்கார் - ஏன்னா நம்பிக்கை தான் கடவுள் -ஒரு சின்ன சலனம் கூட இல்லாமல் உண்மையா நம்பி பாருங்க உங்களுக்கும் புரியும்.

2. ரவியோ :- நினைத்தது நடக்கும் போது இருக்குன்னு நம்புவோம் - நடக்கதாத போது இல்லாததை நினைச்சொம்னு விட்டுட்டு போய்டே இருக்கணும்.

3. அந்நியன் :- எல்லாருக்கும் புரியறமாதிரினா 'நமக்கு அப்பாற்பட்ட சக்தி' - அது எண்ண அலைகளா, இயற்கையின் அலைகளா அல்லது மற்ற வகயிலான அலைகளா சரியாக தெரியலைனாலும் - ஒருவகையான சக்தி - நமக்கு அப்பாற்பட்ட சக்தி.

D)பணம் அவசியமா ?

1. அம்பி :- இரண்டாம் பட்சம் தான்.

2. ரவியோ :- .கண்டிப்பா - "இதெல்லாம் என்ன செய்ய போதோனு" சொன்னவங்கள '"நம்ம பய்யன் தான்...- பய்யன்னா இப்படி தான் இருக்கணும்" னு சொல்ல வச்சுதே,
அது மட்டுமா ... "ஏய்... கொஞ்சம் அப்பறமா கால் பண்ணுறீயா" அப்டீனவங்க "ஹாஇய்.... நெனச்சேன் கால் பண்ணிட்டே... யு நோ நானே கால் பண்ணனும்னு நெனச்சுகிட்டு இருந்தேன்" அப்படீனது...
அதுமட்டுமா... "இது தான் இருக்கு வேணும்னா சாப்டு" என்பது "என்னப்பா சாப்டுற கேட்டுகிட்டு சமைக்கலாம் னு இருந்தேன்" னு சொன்னது மட்டுமல்ல எவ்ளவோ சொல்லலாம் ...
இல்லாத போது பிடித்த விஷயங்களை - இருக்கும் போது பிடிக்காமல் மாற்றிய உன்னை பிடிக்காமலா போகும்.

3. அந்நியன் :- தேவைக்கு அதிகமாக ஒரு பைசா வைத்திருந்தாலும் - அவன் திருடனா அறிவிக்க படனும் - அடுத்த மாதம் உலகமே சந்தோஷமாயிருக்கும்.

நான் இந்தத் தொடருக்கு அன்போடு அழைப்பது...

நட்புடன் ஜமால்:

G3 :

வால்பையன்

குறிப்பு: தட்டச்சு பிழையாள 'ரோமியோக்கு பதில் ரவியோ னு' பதிவாய்ட்டு...
கொய்யாலே ... ஏன் என்ன யாருக்குமே பிடிக்கலங்கர விஷயம் இப்போதான் விளங்குது.

மீண்டும் ஒருமுறை நன்றி ஹேமா.
Author: - இரவீ -
•AM 3:12
பொய்யான உண்மையும் - உண்மையான பொய்யும்,
கசப்பான இனிப்பும் - இனிப்பான கசப்பும், இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.

பார்த்தது பார்க்காமலும் - பார்க்காமல் பார்த்திருந்ததும்,
கோர்த்து சேராமலும் - சேர்ந்தது கோர்க்கபடாமலும், இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.

பேசாமல் பேசியும் - பேசி பேசாமலும்,
உணர்ந்த பிறருக்காகவும் - பிறருக்காக உணர்ந்தும், இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.

அலட்சியமான சிரிப்பும் - சிரிப்பான அலட்சியமும்,
பிடித்தபோது நடிக்கல - நீ நடித்தபோது பிடிக்கல, இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.

வலிக்கமலும் அடிக்கலாம் - அடிக்காமலும் வலிக்கலாம்,
சிரிப்புக்காக பிடிக்கலாம் - பிடிக்காமலும் சிரிக்கலாம், இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.

பிடித்தபோது கொடுக்கல - கொடுத்தபோது பிடிக்கல,
இத பதித்தபோது நீ இருக்கல - நீ இருந்த போது நான் பதிக்கல, இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.
Author: - இரவீ -
•AM 1:19
மனமொடிந்தவனுக்கு கிடைத்த
மகத்தான மருந்து.

சங்கடத்தில் இருந்தவனுக்கு
சந்தர்ப்ப சஞ்சீவனம்...

ஆம் ...

அடிப்பட்ட வலிகூட ஆறிப்போனது உன்
அரைநொடி ஆறுதலில்.
Author: - இரவீ -
•AM 11:04
http://www.s-anand.net/tamilmp3/unakkenna_maele_nindrai

Shared via AddThis