Author: - இரவீ -
•PM 8:17
யார் மனசுல யார்???? ... அவங்களுக்கு என்ன பேர்???? அப்டீங்கிற ஸ்டைல்ல ஹேமா ஒரு பதிவு போட்டிருக்காங்க,அவங்களுக்கு பதில் பதிவா இல்லாட்டியும் - கொஞ்சம் சிரிச்சு வைக்க சில கற்பனை வரிகள்.

பசங்க என்ன நினைக்கிறாங்க இப்ப: ????

வாய்: யே நீ ரொம்ப அழகா இருக்க ...
மெய்: சனியன் - வந்து வாச்சிருக்கு பாரு.

வாய்: நீ இல்லாம நான் இல்லை
மெய்: நீ இல்லைனா எவ்ளோ.... நிம்மதி.

வாய்: பொறுமையா கிளம்புமா அவசரம் இல்லை...
மெய்: திருவாரூர் தேர் கூட கிளம்பிடும் ... இந்த சனியன் கிளம்புதா பார்....

வாய்: என்னை, அப்படியே தெரிஞ்சு வச்சிருக்க...
மெய்: லூசு... எப்படி தான் இப்படி மொக்க தனமா யோசிக்குதோ ...கடவுளே.

வாய்: அழகான பொண்ணுங்க ரொம்ப திமிரா இருக்காங்கப்பா...
மெய்: இல்லாதத நெனச்சு பொறாம படாதா - அவ பாட்டுக்கு போகட்டும்.

வாய்: உன்னை ஆண்டவன் எனக்காகவே படைச்சிருக்கான்...
மெய்: அவன்(ஆண்டவன்) மட்டும் என் கையில சிக்கினான் ...

வாய்: இன்னைக்கு சமையல் அருமை - சமைச்ச கைக்கு மோதிரம் போடணும்.
மெய்: அந்த கைய்ய வெட்டி கரியடுப்புல போட... சமைக்கிறேன்னு சொல்லி சித்திரவத பன்னுறாலே...

வாய்: நீ ஊருக்கு போய்ட்டீனா - நான் இங்க என்ன பண்ணுவேன்,
மெய்: அப்படி ஒரு நல்லநாள் என் வாழ்க்கையில வருமா ????

டெரர்: என்னதிதிது.... அப்படி மோட்டுவளைய பாத்து என்ன சிந்தனை???
வாய்: ஒண்ணுமில்லமா... சும்மா ...
மெய்: உன்கிட்ட மாட்டின பிறகு, சிந்திக்குறதுனா என்னான்னு சிந்தனை பண்ணவேண்டி இருக்கு.

டெரர்: எதுக்கு எல்லாத்துக்கும் இப்படி லூசு மாதிரி சிரிக்கறீங்க
வாய்: ஹி ஹி ஹி ... ஹி ஹி ஹி ...
மெய்: உண்மைய சொன்னா மட்டும் புரிஞ்சுக்கவா போகுது .... ஐயோ ஐயோ ...

குறிப்பு: ஏதோ என்னால முடிஞ்ச உதவியை செஞ்சிருக்கேன் - கல்யாணமான சிக்கி தவிக்கும் சிங்கங்களே - இனி உங்களை காப்பத்திக்கிறது உங்க பொறுப்பு.
Author: - இரவீ -
•PM 10:25
சந்தேகிக்கின்றேன்,
உனக்கெதிராய் கூறப்படும்
உண்மையெனும் வார்த்தையொன்றை.

தவி(ற்)க்கின்றேன்,
நீ தவமென நினைப்பது
தவறாக வேண்டாமென்று.

தவிக்கின்றேன்,
நீ தலை தடவாவிடினும் என்னை
தலை மூழ்காதிருப்பாயென்று.

அன்புடன்,
தம்பி - இரவி.