Author: - இரவீ -
•AM 1:50
அன்று கிராமத்தில் இருக்கும் போது நகரத்தின் மீது வியப்பு,
இன்று நகரத்தில் இருக்கும் போது கிராமத்தின் மீது காதல்,
அன்று அலுத்து போகும் அம்மாவின் அளவுக்கதிக சாப்பாடு,
இன்று வெறுத்து போகும் இந்த அளவுகெட்ட சொந்த சாப்பாடு.
அன்று தினமும் தகராறு பக்கத்தில் இருக்கும் சகோதரியுடன்,
இன்று தினமும் வரலாறு தூரத்தில் இருக்கும் அவளைப்பற்றி,
அன்று வீட்டில் இருக்கும் போது விடுதியின் கண்ட விடுதலை,
இன்று விடுதியில் இருக்கும் போது வீட்டின் கண்ட விருப்பங்கள்,

வெய்யலில் குளிரும், குளிரில் வெய்யலும் விருப்பமாய்.. அன்றும் இன்றும்.
Author: - இரவீ -
•AM 1:57
?ஓட்டு போடணும் எதுக்கு
பார் நினைத்து
,தமிழை காப்பாற்றிய தாத்தாவை
,தன்னலப்பேயை மறந்த தாய்மையை
,சந்தர்ப்பவாதத்தை ஏரோட்டும் அய்யாவை
,குரோதத்தை நீக்கும் காந்தீயத்தை
,பார் நினைத்து
புரியவில்லையெனில் - பார் படித்து திரும்ப ஒருமுறை.