Author: - இரவீ -
•PM 10:12
குறும்பு கண்களை
அரும்பாய் கோர்த்த மாலை
சிறு தடித்த கீழ்உதட்டில்
தங்கி செல்லும் தருணம்

இதயத்துடிப்பை இழந்தேன்
இமையின் படபடப்பில்
உருவிழந்து உருகிநின்றேன்
உதட்டோர புன்சிரிப்பில்

பசும்பாலில் பாட்டெழுதி
பட்டில் கட்டிய குரலோசை
அச் சிறுவாயில் வரும்பேச்சு
அதுவே இசையின் சுவாசமூச்சு

பதுமையே நீ படர் பூசணி
விட்டுவை கெஞ்சும், என்மூச்சை இனி
இடைவிட்டுவை எனக்கும் கொஞ்சம்
பிழைத்து போகட்டும் துணியும் கொஞ்சம்

கூந்தல் சுருண்டு அலைதல் போதாதா
என், அலைதலை அனைத்துவிடு
அப்போது சொல்கிறேன்
அந்தரங்கம் அத்தனையும்.