Author: - இரவீ -
•AM 12:44
விரல் நுனி வெடித்து
சிந்தனையின் பிம்பம் சிதறியபடி
வெளித்து வெளுப்பது வெய்யிலன்று
பந்தங்களும் பாசங்களும்.

மரத்திற்கு பதிலாய் இங்கு
பட்டு போக பாலைவனத்தில்,
வெறிச்சோடிய மன பரப்பில்
நிரம்பிய வெக்கையும்
வறண்ட நினைவுகளுமாய்...

எனது கவிதைகளை(சரி.. சரி... கிறுக்கல்களை), தனது வலைபக்கத்தில் சேர்த்துகொண்ட தீவு.காம் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.
|
This entry was posted on AM 12:44 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 கருத்துகள்:

On 4 ஆகஸ்ட், 2010 அன்று AM 6:08 , நட்புடன் ஜமால் சொன்னது…

வெக்கையை பற்றிய நினைவுகள் பசுமையா இருக்கோ


தீவுக்கு வாழ்த்துகள்

 
On 4 ஆகஸ்ட், 2010 அன்று PM 2:29 , ஹேமா சொன்னது…

பாராட்டுககள் ரவி.புலம் பெயர்ந்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் அதே மன உளைச்சல்தான் இது.உங்களிடம் இன்னும் அதிகமாய் இருக்கு.உங்கள் தேசம் வெக்கையானதால் வெளுத்து வெளிர்கிறது மனம்,பாசம்.இங்கு குளிரில் உறைந்து போகிறது !

இப்படி எழுதுவதே ஒரு ஆறுதல்தான்.தொடர்ந்து எழுதிக்கொள்ளுங்கள்.

தீவு.கொம் க்கும் நன்றி.

 
On 7 ஆகஸ்ட், 2010 அன்று PM 3:09 , கலா சொன்னது…

வெளித்து வெளுப்பது வெய்யிலன்று
பந்தங்களும் பாசங்களும்\\\\\\\

அருமையான வரிகள்
ம்மம்ம்....சூரியனல்லவா?
இப்படித்தான் வரும்!!



மரத்திற்கு பதிலாய் இங்கு
பட்டு போக பாலைவனத்தில்,
வெறிச்சோடிய மன பரப்பில்\\\\
ஏன் காதல் இல்லையா?


நிரம்பிய வெக்கையும்
வறண்ட நினைவுகளுமாய்...\\\\
இரவி துளிர்க்க வைக்க வேண்டும்
ம்ம்ம.முயற்சி பண்ணுங்கள்
விரக்தி கூடவே கூடாது நண்பா!!



சோகத்தின் சுமைகளை
மிக நன்றாக அமைத்திருக்கிறீர்கள்
நல்ல கவிதை நன்றி

 
On 8 ஆகஸ்ட், 2010 அன்று PM 11:47 , - இரவீ - சொன்னது…

நன்றி நன்றி நன்றி ...
முத்தமிழே வாழ்த்தியதாய் சந்தோசம் ...
நன்றி ஜமால்.
நன்றி ஹேமா.
நன்றி கலா.