Author: - இரவீ -
•PM 8:17
யார் மனசுல யார்???? ... அவங்களுக்கு என்ன பேர்???? அப்டீங்கிற ஸ்டைல்ல ஹேமா ஒரு பதிவு போட்டிருக்காங்க,அவங்களுக்கு பதில் பதிவா இல்லாட்டியும் - கொஞ்சம் சிரிச்சு வைக்க சில கற்பனை வரிகள்.

பசங்க என்ன நினைக்கிறாங்க இப்ப: ????

வாய்: யே நீ ரொம்ப அழகா இருக்க ...
மெய்: சனியன் - வந்து வாச்சிருக்கு பாரு.

வாய்: நீ இல்லாம நான் இல்லை
மெய்: நீ இல்லைனா எவ்ளோ.... நிம்மதி.

வாய்: பொறுமையா கிளம்புமா அவசரம் இல்லை...
மெய்: திருவாரூர் தேர் கூட கிளம்பிடும் ... இந்த சனியன் கிளம்புதா பார்....

வாய்: என்னை, அப்படியே தெரிஞ்சு வச்சிருக்க...
மெய்: லூசு... எப்படி தான் இப்படி மொக்க தனமா யோசிக்குதோ ...கடவுளே.

வாய்: அழகான பொண்ணுங்க ரொம்ப திமிரா இருக்காங்கப்பா...
மெய்: இல்லாதத நெனச்சு பொறாம படாதா - அவ பாட்டுக்கு போகட்டும்.

வாய்: உன்னை ஆண்டவன் எனக்காகவே படைச்சிருக்கான்...
மெய்: அவன்(ஆண்டவன்) மட்டும் என் கையில சிக்கினான் ...

வாய்: இன்னைக்கு சமையல் அருமை - சமைச்ச கைக்கு மோதிரம் போடணும்.
மெய்: அந்த கைய்ய வெட்டி கரியடுப்புல போட... சமைக்கிறேன்னு சொல்லி சித்திரவத பன்னுறாலே...

வாய்: நீ ஊருக்கு போய்ட்டீனா - நான் இங்க என்ன பண்ணுவேன்,
மெய்: அப்படி ஒரு நல்லநாள் என் வாழ்க்கையில வருமா ????

டெரர்: என்னதிதிது.... அப்படி மோட்டுவளைய பாத்து என்ன சிந்தனை???
வாய்: ஒண்ணுமில்லமா... சும்மா ...
மெய்: உன்கிட்ட மாட்டின பிறகு, சிந்திக்குறதுனா என்னான்னு சிந்தனை பண்ணவேண்டி இருக்கு.

டெரர்: எதுக்கு எல்லாத்துக்கும் இப்படி லூசு மாதிரி சிரிக்கறீங்க
வாய்: ஹி ஹி ஹி ... ஹி ஹி ஹி ...
மெய்: உண்மைய சொன்னா மட்டும் புரிஞ்சுக்கவா போகுது .... ஐயோ ஐயோ ...

குறிப்பு: ஏதோ என்னால முடிஞ்ச உதவியை செஞ்சிருக்கேன் - கல்யாணமான சிக்கி தவிக்கும் சிங்கங்களே - இனி உங்களை காப்பத்திக்கிறது உங்க பொறுப்பு.
|
This entry was posted on PM 8:17 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 கருத்துகள்:

On 23 ஜூலை, 2010 அன்று PM 9:19 , ராஜவம்சம் சொன்னது…

வாய்:இதுக்கு நான் ஒன்னும் சொல்லமாட்டேன்
நான் நல்லப்பையன்.

மெய்:வீட்டுக்காரம்மா பாத்திறுவாங்களோன்னு பயம்.

 
On 23 ஜூலை, 2010 அன்று PM 9:38 , இந்திரா. சொன்னது…

நண்பரே,
உங்க பேச்சை நம்பி ஏமாற நாங்க என்ன மடையர்களா???
இந்திரா.
(தீவு.கோம்) .

 
On 23 ஜூலை, 2010 அன்று PM 9:48 , ஹேமா சொன்னது…

ரவி...இனி என்னோட கதைக்கவே வேணாம்....என்ன சொன்னாலும் இனி ஒரு உள்குத்து இருக்குமெண்டு பயமாயிருக்கும்.இவ்வளவு இருக்கா கள்ளத்தனம் மனசில !

 
On 24 ஜூலை, 2010 அன்று PM 4:52 , - இரவீ - சொன்னது…

@ராஜவம்சம்:
விடுங்க பாஸ் ...
அவங்க எப்போதுமே அப்படி தான்.
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

@ இந்திரா:
வருக்கைக்கு நன்றி, தொடர்ந்து வாருங்கள்.

@ஹேமா:
வாய்: இதெல்லாம் கல்யாணம் ஆணவங்க சொல்லி கேட்ட விஷயங்கள் .... உண்மையான்னு தெரியல.
இந்த மாதிரி வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க.
மெய்: ஐயோ... சொந்த செலவுல சூனியம் மாதிரி தெரியுதே...

 
On 25 ஜூலை, 2010 அன்று PM 6:55 , கலா சொன்னது…

வாய்: அழகான பொண்ணுங்க ரொம்ப
திமிரா இருக்காங்கப்பா...\\\\

மெய்: ஆமா வாங்கிக் கட்டிகிட்ட எனக்குத்தானே
அது தெரியும்!அவ்வளவு வலி ஒத்தடம் கொடுத்துக்
கொடுத்தே பாடு போயிரிச்சு...


ஆளை விடுடா சாமி இனிமேல் பொண்ணுங்க
பேச்சே வேண்டாம்

அனுபவம்
வாய் பொத்தி...
மெய் நடுங்கி ஓடுவதைப் பார்....

 
On 25 ஜூலை, 2010 அன்று PM 6:55 , கலா சொன்னது…

வாய்: அழகான பொண்ணுங்க ரொம்ப
திமிரா இருக்காங்கப்பா...\\\\

மெய்: ஆமா வாங்கிக் கட்டிகிட்ட எனக்குத்தானே
அது தெரியும்!அவ்வளவு வலி ஒத்தடம் கொடுத்துக்
கொடுத்தே பாடு போயிரிச்சு...


ஆளை விடுடா சாமி இனிமேல் பொண்ணுங்க
பேச்சே வேண்டாம்

அனுபவம்
வாய் பொத்தி...
மெய் நடுங்கி ஓடுவதைப் பார்....

 
On 26 ஜூலை, 2010 அன்று PM 12:13 , அண்ணாமலை..!! சொன்னது…

சிறப்பான ஆராய்ச்சி!!!!
:)

 
On 4 ஆகஸ்ட், 2010 அன்று AM 12:09 , - இரவீ - சொன்னது…

நன்றி கலா.

நன்றி அண்ணாமலை.