Author: - இரவீ -
•AM 3:12
பொய்யான உண்மையும் - உண்மையான பொய்யும்,
கசப்பான இனிப்பும் - இனிப்பான கசப்பும், இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.

பார்த்தது பார்க்காமலும் - பார்க்காமல் பார்த்திருந்ததும்,
கோர்த்து சேராமலும் - சேர்ந்தது கோர்க்கபடாமலும், இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.

பேசாமல் பேசியும் - பேசி பேசாமலும்,
உணர்ந்த பிறருக்காகவும் - பிறருக்காக உணர்ந்தும், இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.

அலட்சியமான சிரிப்பும் - சிரிப்பான அலட்சியமும்,
பிடித்தபோது நடிக்கல - நீ நடித்தபோது பிடிக்கல, இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.

வலிக்கமலும் அடிக்கலாம் - அடிக்காமலும் வலிக்கலாம்,
சிரிப்புக்காக பிடிக்கலாம் - பிடிக்காமலும் சிரிக்கலாம், இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.

பிடித்தபோது கொடுக்கல - கொடுத்தபோது பிடிக்கல,
இத பதித்தபோது நீ இருக்கல - நீ இருந்த போது நான் பதிக்கல, இப்போதும்...
பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.
|
This entry was posted on AM 3:12 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 கருத்துகள்:

On 15 ஆகஸ்ட், 2009 அன்று AM 5:10 , நட்புடன் ஜமால் சொன்னது…

படிக்காமலும் பின்னூட்டலாம்
பின்னூட்டாமலும் படிக்கலாம்

--------------------


வலிக்கமலும் அடிக்கலாம் - அடிக்காமலும் வலிக்கலாம்]]

அருமை இரவீ

 
On 15 ஆகஸ்ட், 2009 அன்று AM 9:58 , G3 சொன்னது…

புரிந்தும் புரியாமலும் - புரியாமல் புரிந்தும்

உங்க கவிதை :))))

 
On 15 ஆகஸ்ட், 2009 அன்று PM 3:59 , ஹேமா சொன்னது…

அச்சோ .....ரவி என்ன ஆச்சு.பயந்தே போய்ட்டினம்.
இப்பத்தான் பாத்தினம்.
உண்மையாத்தான்.
இவ்ளோ பெரிய கவிதை.ஆனா ஒண்டு மட்டும் விளங்குது.என்னமோ கவிதைக்குள்ள இருக்கு.
அப்பிடியெல்லோ.

//பசிக்கும் போது புசிக்கல - புசிக்கும் போது பசிக்கல.//

அப்பிடியெண்டால்.சில நேரம் காதல்.
காதல் வந்திட்டினமோ !

 
On 15 ஆகஸ்ட், 2009 அன்று PM 8:45 , - இரவீ - சொன்னது…

@ஜமால்,

நன்றி ஜமால்.
படிச்சிட்டு திட்டினாலும் - திட்டிட்டு படிச்சாலும் : படிச்சிட்டீங்கள அது போதும்.

@G3,
புரியாத விஷயமே புரியும் போது - புரிஞ்ச விஷயம் புரியாதா என்ன ?
நன்றி G3,

@ ஹேமா,
அச்சோ .....ஹேமா ...
யானும் பயந்தே போய்ட்டினம்.
உண்மையாத்தான். அப்பிடியெண்டால்...
எனக்கு அண்ட சம்பவம் நடந்தா .. பூமிக்கு விசனம் வந்துடுமல்லோ.

//இவ்ளோ பெரிய கவிதை.ஆனா ஒண்டு மட்டும் விளங்குது.என்னமோ கவிதைக்குள்ள இருக்கு.
அப்பிடியெல்லோ.//
அப்படி இல்லlanginam.

----
சொல்லவந்தத சொல்லாமலும் - சொல்லாம விட்டத சொல்லியும்,
பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் நன்றி.

 
On 15 ஆகஸ்ட், 2009 அன்று PM 10:43 , Unknown சொன்னது…

இதையும் படுச்சேன் நானு - நானும் படுச்சேன் இதைய ...
நா இப்போ கீழ்பாக்கத்துல - கீழ்பாக்கத்துல நா இப்போ ...
கவுஜ சூப்பர் - சூப்பர் கவுஜ ......

 
On 16 ஆகஸ்ட், 2009 அன்று PM 1:07 , சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

என்னமா கவிதை..... கலக்குறீங்க போங்க.....

நல்லா இருந்தது உங்கள் கவி வரிகள்....

வாழ்த்துக்கள்......

 
On 16 ஆகஸ்ட், 2009 அன்று PM 3:14 , பெயரில்லா சொன்னது…

அப்டி இப்டின்னு சொல்லிட்டு... இப்டி அப்டின்னு சொல்லிட்டு புரிஞ்சி போய் புரியாமல் புரிந்து புரிஞ்சிக்கிட்டு உங்கள பார்த்து பாக்காம... வந்து பார்த்து சொல்லிட்டு போறேன். நல்லாயிருக்கு.

 
On 17 ஆகஸ்ட், 2009 அன்று PM 2:59 , வால்பையன் சொன்னது…

நல்லாயிருக்கு!

 
On 18 ஆகஸ்ட், 2009 அன்று AM 2:51 , சாந்தி நேசக்கரம் சொன்னது…

//பிடித்தபோது கொடுக்கல - கொடுத்தபோது பிடிக்கல,
இத பதித்தபோது நீ இருக்கல - நீ இருந்த போது நான் பதிக்கல, இப்போதும்//

பிடிக்கவில்லையா ?

சாந்தி

 
On 19 ஆகஸ்ட், 2009 அன்று AM 1:18 , - இரவீ - சொன்னது…

@லவ்டேல் மேடி
நன்றி உங்களுக்கு - உங்களுக்கும் நன்றி.

@சப்ராஸ் அபூ பக்கர்,
நல்வரவு - வாங்க மிக்க மிக்க மகிழ்ச்சி ...
தொடர்ந்து வாங்க.

@ஆனந்த்,
நன்றி ஆனந்த் - உங்க கஷ்டம் புரியுது (சாம் அண்டர்சன் படம் பார்த்த அனுபவத்தில இருப்பீங்கன்னு நினைக்கிறேன்).

@வால்பையன்,
நன்றி வால்.

@ சாந்தி,

வாங்க சாந்தி சுகம் தானே?
// //பிடித்தபோது கொடுக்கல - கொடுத்தபோது பிடிக்கல,
இத பதித்தபோது நீ இருக்கல - நீ இருந்த போது நான் பதிக்கல, இப்போதும்//

பிடிக்கவில்லையா ?//

இத அப்படி கூட புரிஞ்சுக்கலாமா ...

பிடி கொடுக்கல னு சொல்லி இருக்கலாமோ ???

யோசிக்க நல்லா இருக்கு.