Author: - இரவீ -
•AM 1:48
இயற்கையில் இறப்பதும்
இறந்தவர் பிறப்பதும்
இயற்கையின் நியதி என்றால்

(உயிர்) இருக்கையில் இறப்பதும்
இருகையில் இரப்பதும்
எவ்விதியின் சதி யென்பாய்

படுக்கையில் படுக்கஇல்
பணம்வந்து பிணம் தின்று
பறந் தோடி செல்வதெங்கே

பிறக்கையில் வளர்கையில்
பிறர்கையில் வளரவேஇல்
பிந்நெதர்கிந்த சகதி அன்பே
|
This entry was posted on AM 1:48 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 கருத்துகள்:

On 2 டிசம்பர், 2008 அன்று PM 12:20 , கணினி தேசம் சொன்னது…

என்னமோ சொல்லறீங்கன்னு புரியுது.. ஆனா.. என்னன்னுதான் என் தமிழ் அறிவுக்கு புரியல.... க்ர்ர்ர்ர்!

 
On 2 டிசம்பர், 2008 அன்று PM 5:58 , - இரவீ - சொன்னது…

பின்னூட்டத்கிற்கு மிக்க நன்றி,

//என்னமோ சொல்லறீங்கன்னு புரியுது.. ஆனா.. என்னன்னுதான் என் தமிழ் அறிவுக்கு புரியல//

புரியும்....... ஆனா புரியாது....

 
On 19 டிசம்பர், 2008 அன்று AM 3:40 , ஹேமா, சொன்னது…

பாரதி பாடல்போல,ஞானம் பெற்ற உச்சநிலை இக்கவிதை.புரிகிறது.
ஆனாலும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் இயல்பு வாழ்வுக்கு ஒத்து வராது.இல்லையா?

 
On 19 டிசம்பர், 2008 அன்று PM 4:34 , - இரவீ - சொன்னது…

நன்றி ஹேமா,
சிறு துரும்பு எங்கே சிகரம் எங்கே ?
மனிதனை விட - பணம் பெரியதாக உணரப்படும் இந்த பூ(பாழ்)உலகில் இது உண்மை தான், நான் அதற்க்கு விதிவிலக்கும் அல்ல - என் ஆற்றாமையின் - சுகவீனமற்ற சுரம் இது.