Author: - இரவீ -
•PM 8:48
நண்பனின் நற்செய்தி,
சின்னதொரு சிரிப்பு,
சிமிட்டும் கண்கள்,
வண்ண மீனின் துள்ளல்,
குளிர் காற்று,
பனி மூட்டம்,
பசுந்தளிர்,
பரந்த மலைப்பரப்பு,
விரிந்த கடல்,
கடற் காற்று,
கட்டவிழ்த்த காளை கன்று,
இன்னும் எத்தனை எத்தனை...
இறைவா எனை மகிழ்விக்க.
|
This entry was posted on PM 8:48 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 கருத்துகள்:

On 2 டிசம்பர், 2008 அன்று PM 12:30 , கணினி தேசம் சொன்னது…

சோக்கா சொல்றீங்க ..! கலக்கல்.

 
On 2 டிசம்பர், 2008 அன்று PM 5:12 , - இரவீ - சொன்னது…

மிக்க நன்றி குமார்.

 
On 19 டிசம்பர், 2008 அன்று AM 3:28 , ஹேமா சொன்னது…

இரவீ மனம் சந்தோஷமாக இருந்தால் எல்லாம் அழகாக ரசனையோடு இருக்கும்.அதே விஷயம் எரிச்சலோடு இருக்கும்போது அழகற்றுத் தெரியும்.நீங்கள் அத்தனையையும் ரசிக்கிறீர்கள்.
அப்போ எப்போதும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்.அப்படித்தானே!அப்படியென்றால் பெரிதான கோபக்காரர் அல்ல நீங்கள்.சரியா!

இரவீ,பல இடங்களில் சில எழுத்துப் பிழைகளைக் காண்கின்றேன்.
கவனியுங்கள்.
சின்னதொரு
பரந்த மலைப்பரப்பு.
விரிந்த கடல்.

 
On 19 டிசம்பர், 2008 அன்று PM 5:55 , - இரவீ - சொன்னது…

மறதி - தூக்கம் - இறைவன் எனக்களித்த வரப்பிரசாதம்,
இயற்க்கை சிறுவதில் இருந்து என் மன கஷ்டங்களுக்கு மருந்து.
இப்போதெல்லாம் மன கஷ்டம் என்னிடம் மன கஷ்டபடுவதை நினைத்து சிரிக்க ஆரம்பித்து விட்டேன்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் - இயற்க்கை மீதான காதல் அதிகம்.
குடியழிக்கும் கோபம் - வம்சாவழியாக.

ஹேமா - உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது,
தவறுகளை தவிர்க்க முயற்சிக்கின்றேன்.