Author: - இரவீ -
•AM 1:21
கானல் நிஜமென்று
கனவுகண்டேன் நேற்றிரவு!!!
Author: - இரவீ -
•AM 1:48
இயற்கையில் இறப்பதும்
இறந்தவர் பிறப்பதும்
இயற்கையின் நியதி என்றால்

(உயிர்) இருக்கையில் இறப்பதும்
இருகையில் இரப்பதும்
எவ்விதியின் சதி யென்பாய்

படுக்கையில் படுக்கஇல்
பணம்வந்து பிணம் தின்று
பறந் தோடி செல்வதெங்கே

பிறக்கையில் வளர்கையில்
பிறர்கையில் வளரவேஇல்
பிந்நெதர்கிந்த சகதி அன்பே
Author: - இரவீ -
•AM 1:10
அழுத மனம் அடங்கி போனது
சந்தோசம் சம்பவிக்க சத்தியமா வாய்ப்பில்லை
இனிமை இருந்திருக்க இம்மி கூட வாய்ப்பில்லை

சோகத்தின் சுவடுகளும் சுற்றிலும் காணவில்லை
நெஞ்சு கனக்கிறது, என்ன வேதனை புரியவில்லை

இது வெறுமையின் உச்சமா இல்லை
வேதனையின் வெற்றிடமா.
Author: - இரவீ -
•PM 9:16
எவ்வளவு பெரிய சங்கடங்களை வேண்டுமானாலும் கொடு
அதை தாங்கும் மனதைரியத்தை கொடுத்த பிறகு...
Author: - இரவீ -
•PM 8:48
நண்பனின் நற்செய்தி,
சின்னதொரு சிரிப்பு,
சிமிட்டும் கண்கள்,
வண்ண மீனின் துள்ளல்,
குளிர் காற்று,
பனி மூட்டம்,
பசுந்தளிர்,
பரந்த மலைப்பரப்பு,
விரிந்த கடல்,
கடற் காற்று,
கட்டவிழ்த்த காளை கன்று,
இன்னும் எத்தனை எத்தனை...
இறைவா எனை மகிழ்விக்க.